Cholan Young Revolutionary Agriculturalist Award Was Issued To Five Students of Sivagangai Dist,Tamil nadu,India By Cholan Book of World Records on 06-12-2020.
The award as presented by Cholan Book of World Records for their breakthrough in nature farming and aquaculture on five acres of land during the school holidays caused by the Covid 19 pandemic. New era has been created on Tamil's traditional farming by these 5 school students. Cholan Book of World Records Congratulates The Achievers And Wishes Success In All Their Future Endeavors.
சிவகங்கை மாவட்டம் குண்டனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களுக்கு சோழன் இளம் விவசாயப் புரட்சியாளர் விருது.
கொரோணோ தொற்றுநோய் காரணமாக கிடைத்த பள்ளி விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த நினைத்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களான மா.அதிதியா, ச.வைனேஷ், ம.அவந்தியன், ச.தியா, ச.சஸ்வந்த் போன்றோர் இணைந்து இயற்கை விவசாயத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளார்கள்.
பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த 5 ஏக்கர் விவசாய நிலத்தை வெளிநாட்டில் வசிக்கும் தமது தாத்தாவின்( சேவுகப்பெருமாள்) அனுமதியுடன் விவசாயம் செய்ய ஆரம்பித்த இவர்கள், இயற்கை விவசாய விஞ்ஞானியான திரு. நம்மாழ்வார் அவர்களின் காணொளிகள் மூலமாக கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், 11ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வேளாண்மை எனும் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையிலும் இயற்கை உரங்களை தாங்களாகவே உற்பத்தி செய்து பயன்படுத்தி நெல் மற்றும் தட்டைப் பயறு போன்றவற்றை பயிரிட்டு வளர்த்து இன்று இயற்கை விவசாயத்தில் வெற்றி கண்டு விவசாயத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளார்கள். மேலும், ஒரு நன்நீர் மீன் வளர்ப்பு குட்டை அமைத்து அதில் ஆயிரம் மீன் குஞ்சுகளை வளர்த்து இன்று அவற்றில் பலனடைந்துள்ளார்கள். விவசாய நாடான இந்தியாவில் விவசாயத்தை பலரும் கைவிட்டு மறந்து வரும் நிலையில், இந்தப் பள்ளி மாணவர்களின் முயற்சியானது பலரை இயற்கை விவசாயத்தின் மேல் ஈர்ப்பை(ஆர்வத்தை) ஏற்படுத்தச் செய்துள்ளது.
இவர்களின் ஆக்கபூர்வமான இந்த முயற்சியை பாராட்டி ஊக்கப் படுத்தும் நோக்கத்தில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினால் ஞாயிறு அன்று (06-12-2020) சிவகங்கை நகரத்தில் அமைந்துள்ள காந்தி பூங்காவில் வைத்து சோழன் இளம் விவசயப் புரட்சியாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிவகங்கை நகர வருவாய்த்துறையின் வட்டாட்சியர் செல்வி.மயிலாவதி, சிவகங்கை மாவட்ட அரசு கருவூல கண்காணிப்பாளர் மணிக்குமார்,
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தைச் சேர்ந்த நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், பொதுச் செயலாளர் தஆர்த்திகா நிமலன், பொது முகாமையாளர் பிரபு, துணை முகாமையாளர் நவீன் சேதுபதி, இந் நிறுவனத்தின் மதுரை மாவட்ட செயலாளர் மருத்துவர் கஜேந்திரன்,
உழவர் உதவும் கரங்களின் மாநில. பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் தலைவர் ராஜராஜன் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
48 Hours Non Stop Relay Demonstration Performed By 30 Students Of 'LEE CHAMPION OF MARTIAL ARTS'.
The event was held at V.P.N. Arts and science college,Thirumangalam, Madurai, Tamil nadu, India on 27-11-2020 to 29-11-2020 organized by Mr.G.Palpandi (Karate instructor and the founder of 'Lee Champion of Martial Arts).
Certificates were issued to the Achievers by the Deputy Superintendent of police Thirumangalam Area Mrs.S.S.Vinodhini (DSP). Cholan Book of World Records Congratulations The Achievers And Wishes Success in All Their Future Endeavours.
48 மணிநேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைத்துள்ளார்கள் மதுரை Lee Champion of Martial Arts மாணவர்கள். சிறப்பு விருந்தினர் மதுரை திருமங்கலம் பகுதி காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி. S.S.வினோதினி, B.E.,M.A.,.
நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியிருந்தார் கராத்தே பயிற்சி ஆசிரியர் திரு.G. பால்பாண்டி அவர்கள்.
நாள் -: 27-11-2020 முதல் 29-11-2020 வரை
இடம் -: V.P.N. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருமங்கலம்.
Long Range Truck pulling with one side rope
Mr.T.Kannan, S/O Thangathurai, (body Weight 87kg) ( DOB-05-01-1983), Kanyakumari dist, Tamil Nadu, India.
has achieved a record attempt of pulling a truck (9560kg) for a distance of 90 meter (295ft) with one side rope. The condition of the ground was rough and he was barefooted.
The event was officially held in the presence of Mr.N.Annavi, International Athlete, National Athletics Coach, Indian Railways, Tiruchirappalli, at the venue opposite to RTO office, Vellai Madam, Kanyakumari on 25-11-2020. This is a world record done first of its kind.
Cholan Book of World Records Congratulates The Achiever And Wishes Success in All His Future Endeavours.
9560 கிலோ எடை கொண்ட பார ஊர்தியை 90 மீட்டர் தூரம் வரை இழுத்து சோழன் உலக சாதனை படைத்தார் இத்தியாவின் இரும்பு மனிதர்களில் ஒருவரான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.கண்ணன் அவர்கள். ஒருபக்க கயிற்றின் உதவி கொண்டு மேடாக இருந்த சாலையில் இந்த உலக சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக -:
1.மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் திரு.டேவிட் டேனியல்,
2. நல்.அண்ணாவி- சர்வதேச தடகள வீரர், தேசிய சாதனையாளர், தேசிய தடகள பயிற்றுனர்- இந்தியன் இரயில்வே.
3.திரு.H.சரவணசுப்பையா- கன்னியாகுமரி மாவட்ட உடல்வழு சங்க செயலாளர்.